கிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் ..
வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை .... சகுனம்
வெள்ளை தேவதை வீதி உலா !
சகுனம் என்கிறார்கள் மூடக் கடலில்
முடங்கிக்கிடக்கும் முட்டாள்கள்
அந்த வெள்ளை தேவதை வானவில்லாய்
மாறினாலும் வேறு (சி) பட்டம் சிலநேரங்களில் .
கால்கள் தவறி பல்லி விழுந்தாலும்
கால்களே இல்லாதவன் எதிரே வந்தாலும்
கால்கள் இருந்தும் ஊனப்பட்ட இதயங்களின்
பார்வையில் அது சகுனம் .
காலையில் கரையும் காகம் தான்
விருந்தாளிகளின் முன்தகவல் (தகவல் களஞ்சியம்)
முழங்கால் முட்டிக்கும் முடிச்சு
போடும் இந்த மூடர்களின் நம்பிக்கை.
விளக்கை சுற்றி வட்டமிடும்
விட்டில்பூசிகலாய் உள்ள
இந்த மூடர்களின் நம்பிக்கை, அதில்
மூழ்கி மறைவது எப்போது ? ? ?
குழந்தைக்காக காத்திருப்பில்
மங்கைக்கு மலடி பட்டம் .
சாகசத்தின் உச்சியில் பெண்கள் இருந்தாலும்
சில இடங்களில் (இல்லை இல்லை )
பல இடங்களில் வழக்கமாய்
இந்த சகுனம் என்ற விசக்கிருமி இன்னும்.........
................................................................




