Pages

November 24, 2010

அடைமழை - இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?


ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் 
தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும் 
விடுத்து ....
தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை
மட்டும் நிரப்பி வைத்த 
இந்த அடைமழை  !!!

சில இடங்களில் 
தாகம் தீர்க்க வருவாயா 
என்ற எண்ணம் தாங்கி நின்ற 
உள்ளங்களையும் குளிர வைத்தது ...

இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

மகேஷ் !!!!!!!!!
 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

November 20, 2010

அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது
வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் #########



வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில்
மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய்
விண்ணில் பயணிக்க ! !

வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும்
இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள்
 என்ன செய்தேன் என் இந்தியாவுக்கு ????

பார்ப்பதற்கே வாடைக் கண்களாய்
என் மூக்குக் கண்ணாடி தேடும்
இந்த வயதில் என்ன செய்ய முடியும்
என் இந்தியாவுக்கு ??

தாமத உதயங்கலாய் என்னில்
தினம் தினம் இந்த ஏக்கங்கள..

சந்தர்ப்பங்களை கைது செய்த
சூழ்நிலைகள் சூழ்ந்த பல தருணங்கள் .

விழாக்கால பேருந்தின் நெரிசலில்
சிக்கித் தவிக்கும் விடுகதைகள் ஆனேன் ?

உதிரும் நரைமுடிகள் கூட சொல்லும்
வயதைக் கடத்தி வாசகம் செய்தவன்,
சாகசம் செய்ய மறந்ததேன் ????????

அறுபது வயது நாற்காலிக்காக மகேஷ் எழுதும் வரிகள் .....


கருத்துரை கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள் நண்பர்களே 
இது என்னை மேலும் மேலும் மெருகூட்டுகிறது நன்றிகள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

மழலை


ஊரிலுள்ள குயில்களை எல்லாம்
சிறை பிடித்து, பாட சொல்கிறேன்
மழலை உன் குரலின் கீதம் திரட்டிட !

எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய்
இப்படி நீ உறங்கும் அழகில்
நான் அறுவடைக்கு வரும்
பயிர்களாய் திளைக்க !!!!!!

மங்கையின் மௌன மொழிகளையும்
வெல்லும் உன் மழலை மொழி !

சில நேரங்கள்  நீ அடம் பிடிக்கும்
அவசரங்கள்,
"செவ்வாய் கிரகத்தை பற்றி வரும்
விண்கலம் செலுத்தாப் போகிறாயா ?
என்ற சந்தேகம் என்னில் "

கௌசிக்

 இவன் -- உன்னால் மழலையாய் மகேஷ் !

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

November 19, 2010

கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே 
நிரப்பத் தெரிந்த 
என் பள்ளிப் பருவ நிறுவல்கள் .
இன்று ! ! !
கணிபோறித் திரையில்
கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! !

மன்னிக்கவும் 
இது என் தலைக்கனமோ ! 
தற்பெருமையோ !
இல்லை அந்த கடவுளுக்கே 
வரங்கள் தரும் மன நிறைவு பெற்றவன் நான் 

மகேஷ் 
 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ....

November 18, 2010

சாலையோர நீர்த்தேக்கமாய்


உன் ஒரு நிமிட முனுமுனுப்பில்
ஓராயிரம் மொழிகளில் கவிதை
எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்..

அட பிரம்மனின் உளிகள் என்ன
கூர்மை உன்னை இப்படி 
அழகாய் படைத்தானே ! ! !

உன்னை வருணிக்க என் மூளையையும் 
அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு 
தீட்ட வேண்டுமா என்ற குழப்பத்தில் நான் ? ?
"மழைக்கால சாலையோர நீர்த்தேக்கமாய் "

மகேஷ் ? ? ? ? ? ?


மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் 
தவறிய சந்தர்ப்பங்களும் 
உயிர்த்தெழும் உன் சிந்தனையால் .

இரவைத் தேய்த்து பகலை துயில்
எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்!
தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் 
சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! 

காலம் கடந்த பயணங்கள் 
தேவையில்லை , உன்னில் 
பயணிக்க காலம் காத்திருக்கிறது.

உன் உள்ளம் உருக்கும் மாயை
உருவங்கள் வேண்டாம் ..

வழியெல்லாம் விழியைத் தேடும்
உளறல்கள்  வேண்டாம் ? 

உன் விழியில் வழித் தேடு ! 
வெற்றி உனதே ! ! ! !

+ மகேஷ் +


மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

November 16, 2010

சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட
ஒரு இதயத்தின் வரிகள்.....................


சுமை தாங்கி கற்கள் இல்லை 
இப்போது ,
என்னைப் போன்ற சிலரின்
இதயக் கூடுகள் சுமை தாங்க
இருப்பதால்......
உழவனுக்கு தெரியாது மண்புழுவின் 
காயங்கள் ........
அதுபோல தான் என் காயங்களும்..

$ மகேஷ் $

November 3, 2010

திபாவளி நல்வாழ்த்துக்கள்

வாசக அன்பு உள்ளங்களுக்கு உங்கள் மகேசின்

திபாவளி நல்வாழ்த்துக்கள் 


உறங்கிய சந்தர்ப்பங்களும் 
தவறிய சந்தர்ப்பங்களும் 
உயிர்த்தெழும்
நம்மில் வாழும் கொடிய 
மிருகத்தை  விரட்டிவிட்டால் . 
 என்றோ மாண்ட நரகாசுரனை எதற்கு 
நினைவு கொள்ள வேண்டும் ....

மகேஷ்...................................


Related Posts Plugin for WordPress, Blogger...