Pages

December 31, 2010

இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும்
மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக !

சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட
கண்ணில் படும் பயிர்களெல்லாம்
மரகதமே உன் வாசம் வீசிட.

எதிர் வரும் இரயிலின் தடக் தடக்
சத்தம் நீண்டு கொண்டே போக!
நீ மட்டும் என் இதயத்தில் லப் டப்!  லப் டப்!

உன் நினைவுகளின் தாலாட்டில் நானிருக்க
மரணமே சகித்துக் கொள்ளும்
என்னை  நெருங்கிட ?

மகேஷ்.......

தமிழ்மணம் விருதுகள் 2010 இல் எனது படைப்பு
கவிதை, இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப் பட்டதை 
உங்கள் அனைவருக்கும் சொல்வதில் கடமை பட்டிருக்கிறேன்   ...


அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்.

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்
என் தண்டனையின் நீளம் குறையும்.

உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள்
சிந்திக்கத் தொடங்கி விட்டால்
இது வரை நான் கண்ட
என் வாழ்க்கையின் வலிகள்
அர்த்தப்படும் .

தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும்
சன்னல் வழிக் காற்றாய் பின் தொடர்வேன் .

கவிதைக்கு அர்த்தங்கள் தந்த என் காதலுக்கு
இலக்கணம் உன்னில்.

மகேஷ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

பூக்கொத்து நிலவுகள்

மலர்களின் சங்கமமாய் அந்த நம் மகளிர் விடுதி !!

எத்தனையோ நாள்  
தலையணையாய், தாய் மடியாய்
தோழிகளின் மடியில் குட்டி உறக்கங்கள்.
ஒருவர் வடித்த பொய்களுக்கெல்லாம்
உண்மைக் கோட்டை கட்டிய மற்ற தோழிகள் .
காலை கதிரவன் வருகிரானோ இல்லையோ
விடுதியின் அறைகளில் இருந்து 
கிளம்பும் நிலவுகள்.
பூக்கொத்து நிலவுகளாய் !
கல்லூரி உலா வர ! ! !



மகேஷ்.. 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

December 30, 2010

யார் அனாதை ? / பிரிந்த உறவுகளைத் தேடி



யார் அனாதை :?
 விலகிச் சென்றவரும்  அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்

காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில்
குழந்தையை போட்டு விட்டு
அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

பிரிந்த உறவுகளைத் தேடி :

மேகங்கள் கூட
மரங்கள் மேல் கொண்ட காதலால்
மர உச்சியில் உறவாடிச் செல்லும்

வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள்
கூட உறவுகளாய்ப்   பளபளக்க !
உறவுப்  போர் கூட  தேவையில்லை.
பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் .

பிறவிகள் தான் பிரிவுகள் தருமே தவிர
பற்றற்று கிடக்கும் உறவுகளின் ஊடே
உள்ள இடைவெளி  இல்லை .


மகேஷ்....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

December 24, 2010

சுலபத் தவணையில் இறுதிச்சடங்கு (புகைப்பதால்)


அவன் புகைக்கவில்லை
புகையிலை தான் அவனை புகைக்கிறது !

 தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு)
புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்).

புகைவிடும் உதடுகள் தான்
உச்சரித்தது "புகை பிடிக்கதே" என்று ....

வெறும் உச்சரிப்புகளில் தொலைந்து போகும்
 இந்த வார்த்தை உறுதிமொழியாக மாறுவது எப்போது ????

மகேஷ்...

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்  25Dec-2010

December 23, 2010

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்


என்னில் தேடல் உள்ள போது 
உன்னில் காதல் இல்லை !

உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம்
என் உருவம் உறங்கும் இடத்தில்..
மலரே ! 
நீ மலர் தூவும் நேரம் 
மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே.

உன்னோடு சேர மணவரை மட்டுமே
என் ஊடகம் 
மரணம் இல்லை ...

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல் ....


மகேஷ்...

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

தாஜ்மஹால் காதலின் சின்னமா (Is Tajmahal world Wonder ?)

தாஜ்மஹால் காதலின் சின்னம்
என்று சொல்ல மறுப்பேன்
ஏனென்றால்
அது நம் காதல் போல...
முதல் (ஒரே) காதல் இல்லை !!

பருவத்திற்கு வந்து மறையும்
முகப்பருக்களில் ஒன்றாய்
அவர் மனதில்
தோன்றிய ஒன்று !!

மகேஷ் .....

பிழை இல்லை .. மனம் வருந்துபவர்கள் மன்னிக்கவும் 
 

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

December 16, 2010

அணுவாய்ப் போனாலும் காதலிப்பேன்

உன் அருகில் நின்று                            
சுவாசிக்கையில், என் எல்லா           
 அணுக்களுக்கும் குறுஞ்செய்தி         
அனுப்புகிறேன் .                                   
மூச்சுக்க்காற்றாய்  குருதியில்          
கலந்தது வரும் உன் நினைவுகளை 
சேமிக்கச் சொல்லி ..                            

சந்திப்புகளின் முடிவில் காதல்          
இனிப்பதில்லை                                    
பிரிவுகளின் முடிவில் தான்               
காதல் இனிக்கிறது ...!!!!                       

அணுக்களாய் சிதைந்து போனாலும் 
காதலித்துக் கொண்டுருப்பேன்         

மகேஷ்..

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் கருத்துரையிட்டு (Comment) செல்லவும்

December 9, 2010

கண்ணீர் நீரோடையில் எங்கே என் காதல்




என்னவனே உன் கைவிரல் பற்றி 
வாழும் ஆனந்தம் தொலைக்கப் பட்டு 
தனியாக என் கைவிரல் மட்டும் நனைகிறது 
என் கண்ணீர் துடைக்கும் வேலையில்.

என் இந்த பிறந்த நாளில் , நான் வாழும் பொழுதே ! !
உன்னவள் (இன்று) பெற்ற மகளாய்  உருவகப்படுத்தும்
சந்தர்ப்பங்கள் மட்டும் என்னில் 
அழியாத கோலங்கலாய் ! 

நம் திருமணம் எனும் தொடக்கம் கூட
எனது இந்த இரடைப்பிறவி வாழ்க்கை 
தந்திராது ! என்ற சுதாரிப்புகள் மட்டும்
விட்டு வைத்த மிச்சங்களாய் !

கலங்கித் திரிய மாட்டேன் காதலனே !
கைபிடிக்கும் சந்தர்ப்பங்களை
கடவுள் பற்றினாலும் 
நான் நினைக்கும் கனமெல்லாம்
கற்பனையில் உன்  மடியில் 
உன் மகளாய் உருவெடுப்பேன் !!

நான் பிறந்த நாளில் என்னில் ஊற்றாய் 
இந்த கண்ணீர் நீரோடை மட்டுமே என்னுடன் !

இந்த கவிதையின் கதாநாயகி என் சகோதரியின் துக்கங்களுக்கு எழுத்து உருவம் கொடுக்க என்னில் உதித்த நீரோடை .... 

மகேஷ் 

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

December 5, 2010

இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே 
இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் 
அதை திறக்க வைக்கும் மந்திரம் 
தான் உன் மௌனத்தில் 
முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற 
வார்த்தை தான்.................

உன் முகம் பார்க்கும் நேரங்களில்
கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட
வலிகள் தான் எனக்கு  ..
என் இமைகள் வெறுக்கப்படும் 
நேரமும் அதுவே ...

மகேஷ் ..


இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....
Related Posts Plugin for WordPress, Blogger...