Pages

March 29, 2011

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா? | thril experience | Message for you

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்????
சரி கதவை தாளிட்டு பின் படுத்துக் கொண்டே என் எண்ண ஓடையை ஓடவிட்டேன்.

சில நிமிடங்களில் கதவின் கீழ் உள்ள சந்து வழியாக ஒரு கடப்பாரை உருண்டு வந்தது என்னைக் கடந்து கட்டில் அடிப்புறம் சென்றது ..
அந்த சத்தம் எதோ இரயில் பாலத்தின் அடியில் இருப்பது போல ஒரு உணர்வு தந்தது...
 என்னால் எழுந்து பார்க்க முடியவில்லை யாரோ கட்டி போட்டது போல் ஒரு உணர்வு, எழுந்து பார்க்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இருட்டில் முகம் தெரியாத ஒரு உருவம் என் கழுத்தை நெரித்துக் கொள்ள வந்தது.  
இது போன்ற நிகழ்வுகளில் சிலர் கதவோ அல்லது எழுந்து ஓடவோ செய்வர் .. நானும் கத்தினேன் அதற்கு முன் மனதில் ஒரு யோசனை வந்தது.கடப்பாறையை தானே உருட்டி விட்டான், பிறகு ஏன் என் கழுத்தை நெரிக்க வருகிறான்  என்று.....அதன் பிறகு தான் கத்தவே ஆரம்பித்தேன்...
திடீரென அவனைக்காணவில்லை ...

இந்த அனுபவத்தை எழுதும்போதே, என் எழுதுகோல் மை  கூட பயத்தில் வெளிவராமல் கிறுக்கிக் கொண்டு இருந்தேன்.

டொக் டொக் !!!!
யாரோ கதவைத் தட்டுகிறார்கள், பயத்தில் விடுதி நண்பர்   ஒவ்வொருவரின்  பெயரை சொல்லியும் பதில் இல்லை ....
சிறு இடைவெளியில் நான் தான் என்ற பதில்...மட்டும்...
அப்போது தான் உணர்ந்தேன் கண்டது கனவாக இருக்கலாமோ...
கனவே தான். முடிவு செய்தேன்...

திறந்து பார்த்தல் புது முகம்... ஓஹ ஒருவேளை இவர்தான் அந்த ஆயுதத்தை உருட்டிவிட்டுருப்பாரோ என்ற பயம் வேறு மனதில்.
கட்டில் அடியில் அந்த ஆயுதம் இருப்பது போலவே ஒரு சந்தேகம்.

வந்தவர் எழுதுகோல் இருக்க நண்பரே என்றார்..நான் இந்த அனுபவங்களை எழுதிய காகிதத்தை பார்த்தவர்,  (பயத்தில் தானே எழுத்துகள் சரி இல்லையே )
இது சரிவராது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இதை கதையாக சொல்லவோ, கனவில் வந்ததை பகிர மட்டுமோ இந்த பதிவை இடவில்லை....

சரி என்னதான் சொல்ல வருகிறாய் என்ற கேள்விதானே? உங்களிடம்...
????????????????????????????
சொல்கிறேன்..........

நான் கண்ட கனவும் உண்மை, தூக்கம் களைந்து எழுதியதும் உண்மை...
அந்த இருட்டு அறையில் கனவில் இருக்கும் பொது (கடப்பாரை) ஆயுதம் உருண்டு வந்ததும்  கண்களை விழித்துக் கொண்டேன், ஆனால் கனவு தொடர்ந்தது , அந்த உருவம்  மட்டும் தெரிந்தது இருட்டில் முகம் தெரியவில்லை...

ஒரு நிமிடம் கவுண்டமணி அண்ணன் கூப்பிடுகிறார் :


கவுண்ட மணி : என்னதாண்ட சொல்ல வர்ற ????


சந்தானம் : அதனால எல்லாரும் தூங்கும் பொது light போட்டுட்டு தூங்குங்க சரியா ???

நன்றி சந்தானம் .........

சரி நான் விசயத்துக்கு வருகிறேன்.
கண்களை விழித்தும் நினைவு ஓட்டம் மட்டும் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது, என்ன விந்தையாக இருக்கிறதா ?
ஆம்

கிராமங்களில் சிலர், நான் குட்டி சாத்தானைப் பார்த்தேன் என்றெல்லாம் சொல்வார்கள், நானும் கேட்டு இருக்கிறேன் . குட்டிசாத்தானையோ அல்லது ஏதேனும் ஒரு பயமுறுத்தும் உருவத்தையோ மற்றவர் சொல்லக் கேட்டு அது இப்படி தான் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் பொது,,,,,,,
 இரவில் 2 வது ஆழ் மனதில் ஓடும் எண்ணமே கனவாக வரும் அது அவர்கள் கண்களை விழித்தலும் தொடரும்.

சிலர் விழித்துக் கொண்டே இருக்கும் போதே அதுபோன்ற அனுபவங்களும் ஏற்படும்,, அவர்கள் மனதில் நான் குட்டி சாத்தானை பார்த்தேன் என்று பதிந்து விடும்.. 

இது போன்ற நிகழ்வுகளை சிலர் சொல்லும்போது, அவர் நீங்கள் சொல்வதை கேட்பவராக இருந்தால்,
அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்.அவர்களும் இந்த உண்மையின் ஆழத்தை அறியட்டும்...



மகேஷ்.........................

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 27, 2011

மௌனப் பதில்கள்



ன் நினைவுகளால் ,
       னக்காக,
             ன்னை நினைத்து,
                   ருணித்து எழுதிய

ன் கவிதைகளின் வார்த்தைகள் கூட
என் மேல் காதல் கொண்டது ....

இன்னும்...........
ன்னிடம்  இருந்து வரும் மௌனப் பதில்களை
எற்றுக்கொள்ள முடியாமல்...
ன்னை சூழ்ந்த,  உன் நினைவுகள் தாங்கிய 
ஊடகங்கள் யாவும் என் துயரப் பகிர்வுகளில்..


மகேஷ்.................


மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 23, 2011

காதல் கதிர்வீச்சு



இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில்
என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த 
மறுக்கிறது , - இங்கே 
துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால்.

இசையாய் மட்டுமே நீ என்றால்
சுதாரிப்புகள்  உண்டு என்னிடம்.
ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய் 
நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய்.

கதவுகள் இருந்தும் காதல் கதிர்வீச்சு
இன்னும்  மறுக்கப் படவில்லை ...........

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 21, 2011

காதல் கவிதை : ஒற்றைத் தளிர் காதல் கொடியாக ! Mahes Kavithai | Kaathal Kavithai

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக 



என்னில் பூத்த ஒற்றைத் தளிரே
நீ மட்டுமே நிலைத்திருக்க .......
உனக்காகக நான் வெறும் 
ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே.

என்னை அலங்கரிக்கத் தோன்றிய 
என் படைப்பிலக்கியமே....

என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே, 
நீ மட்டுமே நிலைத்திருக்க .......
என்னில் பூக்கத் துடித்த தளிர்கள் யாவும் 
அங்கீகாரம் பெறாமல் இன்னும் 
வெளியேற்றப்பட்ட எதிர் கட்சி உறுப்பினர்களாய்.

நீயாகவோ, தற்செயலாலோ,
என் காதலை அணுக்களாகப் பிளந்து
தூக்கி வீசினாலும் , அமீபாவின் சுழற்சியில்
அந்த காதல் விதைகள் சொல்லும் 
என் விருட்சமாகி நின்றவள் நீ தான் என்று.

உங்கள் மகேஷ்.......

விரைவில் சிறு கதைகளுடன் உங்களை சந்திக்க வருகிறேன்.

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 14, 2011

ஆன்மீக சிந்தனைக் கவிதை Mahes Quotes-Spritual Quotes


மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்...
ஆன்மீக குணங்கள் வடித்த எனது  எண்ண ஓடை! ! !




நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் 
ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் 
கரையாத கல்.
என்னை நீ சில சமயம் மூடி மறைக்கலாம் 
ஆனால் 
நீயோ உன்னை கலங்கடிக்க செய்யும் நீரோ என்னில் 
உட்புக முடியாது ...... 

கிடைத்தவர் கைப்பக்குவம் போல் உருமாறும் உன் நிலையில்
இல்லை நான்...
சிற்பி என்னும் கடவுள் மட்டுமே என்னை உருமாற்ற முடியும்.


- மகேஷ் ....... 

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 12, 2011

சுனாமி - மனதில் ரணம் tsunami in japan 2011

இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள் 
இன்னும் ஓயவில்லை
மீண்டும் ஓர் மாரடைப்பு .......

காட்சிகளே உயிரின் ஆழம் வரை 
பாய்ந்து விட்டது என்றால் ..
அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ.

கடவுளே !
உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ??

நம் உறவுகள் மீது பாய்ந்த நீருக்கு 
போட்டியாக எத்தனையோ கண்களில் 
பெருக்கெடுத்த கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல
முயற்ச்சிக்கும் வரிகள்..

மனதை ரணம் பற்றிய காட்சிகள் =>











மகேஷ்..........


இந்த பதிவு பாதித்திருந்தால் மறவாமல் மறவாமல் 
மறுமொழியிட்டு  (Comment) செல்லவும்

March 8, 2011

வெற்றிக்கோப்பை

வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு.
உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு  செய்து சொல்லிடுங்க ................

காதலை ஏற்காத பெண்மை தன்னை
நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக
மதுக் குடுவை திரவிய மயக்கத்தில்
மதுக் குளியல் போடும் மீன்களே சற்று
இதையும் நுகருங்கள்  !!

பகல் இரவு தாண்டிய கிரகங்களை எட்டிப்
பார்த்துக் கொண்டிருந்த அறிஞன் இன்று
அங்கிருந்து பூமியை பார்க்கிறான்
ஓய்வெடுக்கும் வேடந்தாங்கல் பறவையை போல!

இன்னும் இங்கு பலர், போதையில் மட்டுமே
புதிய கிரகம் பிரவேசிகளாய்..........

வேடிக்கை பார்ப்பவனுக்கு புதையல்
என்றும் சொந்தமாகாது ... களத்தில் கடின மண் பரப்பையும்
வியர்வை கொண்டு இலகுவாக்கி  பணிய வைப்பவனே
வெற்றி கொள்வான்....


மகேஷ்..

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

March 7, 2011

காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும்
தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட
வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்)
உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு
இல்லை எனும்,
என் கட்டளையை
உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு.....

தென்றலாய் நான் இருந்தாலும்
உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்.....

என் நினைவுகள் கூட  ஆயிரம் காதல்
மொழிகளைக் கொண்டது .




மகேஷ்....
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....
Related Posts Plugin for WordPress, Blogger...