பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும்
உனைப் பற்றிய என் நினைவுகள் !
சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும்
கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல்.
உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில்
உருவாகும் மின் மெகா-வாட் களால்
இயங்கும் உன் உன் மின் காந்தக் கண்களில்
சிக்கித் தவிக்கும் என் பார்வை நரம்புகள் .(சில நேரங்களில்).!...
எத்தனை சூத்திரங்கள் கொண்டாலும்,
காலக் கணிதமும், சோதிட அறிவியலும் என்
தலைவிதியை நிர்ணயிக்க இயலாது.
நீ என் மனக் கணிதத்தின் சூத்திரங்களாக இருக்கும் வரை.
மகேஷ்
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்
4 comments:
அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
..நீ என் மனக் கணிதத்தின் சூத்திரங்களாக இருக்கும் வரை//அருமை அருமை மிகவும் பிடித்தது
அன்பரே உங்கள் தளத்திற்கு "LIEBSTER BLOG "விருது பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்
"LIEBSTER BLOG விருது"- கொஞ்சம் கணக்கிறது மனது
அருமை..
Post a Comment