Pages

May 28, 2012

உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது


உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும்,
நீ முன்னேற யோசித்தால் போதும்.

உன் தேகம் தீண்ட சூரியன் உன்னிடம் அனுமதி கேட்க்கும்
உன் தோள்கள் வியர்வை சிந்த சம்மதித்தால்.

விரல்களில் மறைந்திருக்கும் ஆயிரம் வித்தைகள் விளையாடும்,
மடக்கி வைத்த உன் விரல்களுக்கு விடுதலை கொடுத்தால்.

புத்தகத்தில் எழுத்துகளும் உன் கண்கள் தரிசனத்திற்கு எங்கும்
உன் கண்கள் அதை ரசிக்க தொடங்கினால்.

ஊடகம் இருந்தும் தூக்கத்தில் போடுவது எதற்கு தோழனே.!
என்னில் சில ஊடகங்கள் தினமும் தூங்குவதை கண்டு
வியக்கிறேன். ஓய்வு நேரம் குறைவு என்பதால்.

உழைக்க நிமிடங்கள் கிடந்தும் வெறும் பார்வையாளனாய்
இருந்திடாதே. வேண்டுகிறேன்.



உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது.


நீரோடை-மகேஷ். 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள் ! பாராட்டுக்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...